Tuesday, October 31, 2006

கவித... கவித...

அட்ரஸ் ஒன்றை தேடுவதற்காக போன வருஷ டைரியை புரட்டிக் கொண்டிருக்கையில் நான் எழுதிய கவிதை ஒன்று கண்ணில் பட்டது.

"நீ பிறப்பதற்கு முன்னரே
நிலவைப் பார்த்தவன் நான்.
அது இவ்வளவு பிரகாசமாயிருக்கவில்லை."


ஆகஸ்ட், 2005ல் எழுதப்பட்டிருக்கிறது.

Monday, October 30, 2006

இடஒதுக்கீடு

மதுபரத் வீட்டுக்கு வந்திருந்தான். வேற ஏதோ பேசிக்கிட்டு இருக்கும் போது இட ஒதுக்கீடு பற்றி ஒரு பேச்சு வந்தது. காலேஜ் மற்றும் வேலை வாய்ப்பில் பொருளாதார வசதியில் பின் தங்கிய மற்றும் கிராமப்புற மாணவர்களுக்கு மட்டுமே இடஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும் என்பது என் வாதமாக இருந்தது. நீங்க என்ன சொல்றீங்க?

Saturday, October 28, 2006

பட்டாதான் தெரியும்

திரு எப்பவும் போல மிஸ்ட் கால் குடுத்திருந்தான். கால் பண்ணினேன். மழையில் சரியா ரோடு பார்க்க முடியாம ஆக்ஸிடென்ட். என்னை மாதிரி நீங்களும் பயப்பட வேண்டாம். சின்ன அடிதானாம். மழைக்காலத்துல பாத்து வண்டி ஓட்டுங்கடா! பட்டாதான் தெரியும் அதோட வலி.

Friday, October 27, 2006

கண்ணும் கண்ணும் நோக்கியா...

அக்டோபர் 19, 2006. தீபாவளிக்கு முந்தைய தினம். அன்று மட்டும் இந்தியாவில் நாலு லட்சம் நோக்கியா மொபைல் போன்கள் விற்பனையாகி உள்ளன. இதற்கு முன் உலகெங்கிலும் ஒரே நாளில் ஒரு லட்சம் போன்கள் விற்கப்பட்டது சாதனையாக இருந்தது. இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் 30% போன் விற்பனை, சிறு நகரங்கள் மற்றும் கிராமங்களிலிருந்து. இந்தியா முன்னேறுகிறதா?

கடன் அன்பை முறிக்கும்

இந்த மாதிரி விளம்பரம் தினமும் நியூஸ்பேப்பரில் வருவதை பார்த்திருக்கிறேன். நீங்களும் பார்த்திருப்பீர்கள். என்ன தோன்றியது இதைப் பார்க்கும் போது? எனக்கு இந்த விளம்பரம் பார்க்கும் போது நிறைய சந்தேகங்கள் எழுந்தன.
முதலில், ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் கடன் வாங்கும் போது, தவணையைக் கட்டத் தவறினால், இதுபோல் வாடிக்கையாளர்களின் வராலாறு அம்பலப்படுத்தப்படும் என்பது அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டிரிக்குமா?
இரண்டாவது, கடனை வசூலிக்கும் முறை: கடனாளியை அவரின் நண்பர்கள், உறவினர்கள் முன்னிலையில் அவமானப்படுத்தி வசூலிப்பது கந்துவட்டிக்காரர்களின் பாணி. வங்கிகள் "நாணயம் தவறிய கடன் தாரர்கள்" என்று விளம்பரப்படுத்துவதும் அதே நோக்கில் தானே. என்ன வித்தியாசம் கந்துவட்டிக்காரனுக்கும் வங்கிகளுக்கும். கடனை வசூலிப்பதில் தவறில்லை. அதற்கு இது மட்டுமே வழியில்லை. மாற்று வழியை என்னிடம் வங்கிகள் கேட்டால், அவை வங்கிகளில்லை.
மூன்றாவது, பத்திரிக்கைகள் இதைப்பற்றி அமைதியாக இருப்பது. அவர்களுடைய விளம்பர வருமானம் பாதிக்கப்படுமோ?