Sunday, December 30, 2007

கர்த்தர் தாமே எனக்கு முன்பாக போகிறவர்.

கர்த்தர் தாமே எனக்கு முன்பாக போகிறவர்.




அவர் எப்போது கார் ஓட்டக் கற்றுக்கொண்டார்?

குறிப்பு: பைபிள் வசனங்களையோ கர்த்தரையோ நான் விமர்சிக்கவில்லை.

Wednesday, December 19, 2007

எப்படி இருந்த நான் இப்படி ஆய்ட்டேன்!

ரென்டு நாளாவே நல்ல மழை. இப்பவும் மழை விடாததால கீழ இருக்க மளிகை கடையில போய் ஒரு பிஸ்கெட் பாக்கெட் வாங்கி சாப்பிட வேண்டிய நெலமை.

"அந்த மில்க் பிக்கீஸ் பிஸ்கெட் குடுங்க"
"..."
"இது பிரிட்டானியா தான", எக்ஸ்பையரி டேட்டைப் பார்த்துக்கிட்டே கடக்காரர்ட்ட கேட்டேன்.
அவர் ஒரு மாதிரி பாக்கவும், "பாக்கெட்லாம் மாத்திட்டாம் போல" என்று மீதி சில்லரையை வாங்கிட்டு வந்தேன்.

வீட்டுக்கு வந்து ஆசையா பாக்கெட்ட பிரிச்சா உள்ள வேற ஏதோ புது டிசைன்ல கட்டங்கட்டமா இருக்குது.



எங்க என்னோட பழைய பிஸ்கெட்ட காணோமேன்னு கூகுள்ல தேடும் போது கிடச்சது.



சுத்தி பூப்போட்டு நடுவுல "BRITANNIA" அப்படீன்னு எழுதிருக்கும். அம்மா அஞ்சு பிஸ்கெட் குடுத்தா கொஞ்சகொஞ்சமா பூவ முதல்ல சாப்பிட்டுட்டு அப்புறம் நடுவுல சாப்புடுற சுகம் இப்ப இருக்க சின்ன பசங்களுக்கு கிடைக்காது. நானா இல்ல என் தம்பியா, யாரு ரொம்ப நேரம் அந்த அஞ்சு பிஸ்கெட்ட சாப்பிட்டோம்ங்கிறது தான் கிளைமாக்ஸ்.

சிறுகதை எழுதுவது எப்படி?

இன்று தினமலரில் (சென்னை பதிப்பு) பக்கம் 5ல் ஒரு செய்தி:

"அரசு விரைவு பஸ் டிக்கெட் முன்பதிவு தீவிரம்; பயணிகளை திசை திருப்ப புரோக்கர்களும் முகாம்"




செய்தியெல்லாம் சரிதான். அதில் ஒரு சிறுகதையும் சேர்த்து செய்தியை சுவாரசியமாக்கியிருக்கிறார்கள்.

பெண்களை அங்கு உரசியதகவோ அல்லது சீண்டுவதகாவோ யாரும் புகார் கூறியதற்கான சான்று அளிக்கப்படவில்லை. வெறும் போட்டோகிராபர் கொண்டு வந்த புகைப்படத்தை வைத்துக்கொண்டு, ஆபீஸில் அமர்ந்தே கொஞ்சம் கற்பனை கலந்து எழுதப்பட்ட செய்தி இது என்பது என் கருத்து.




மேலும் அத்தகைய சந்தர்ப்பங்களில் அவ்வாரு செய்யக் கூடிய ஒரு ஆணின் கற்பனையாகவே இதை எடுத்துக் கொள்ள முடியும்.

குறிப்பு: இரண்டு வருடங்களாக நான் தினமலர் வாசகன். இந்த செய்தியை எழுதியவர் யாரென்பது எனக்கு தெரியாது. அவர் மீது எனக்குத் தனிப்பட்ட விரோதமோ அல்லது தொழில் விரோதமோ கிடையாது. இதை ஒரு வாசகனின் கருத்தாக தினமலர் எடுத்துக்கொள்ள வேண்டுகிறேன். ஆட்சேபித்தால் மேலுள்ள இரு படங்களையும் எடுத்துவிடுகிறேன்.

Saturday, December 15, 2007

எம்ஜியார் செக்கிழுத்தாரா?

சின்னப்பிள்ளத்தனமா இருக்கு! கீ போர்டு இருக்குங்கறத்துக்காக என்ன வேணும்னாலும் டைப் பண்ணிடறதா? எம்ஜியார் செக்கிழுத்தாரா இல்ல மஞ்சளரைச்சி கொடுத்தாரா? எப்படிடா சொல்லாலாம் நீங்க அவரு சுதந்திர போராளின்னு?



இவர்தான் அது!

Wednesday, December 12, 2007

உயர் அதிகாரி: நிர்வாண படம்

இன்னக்கி எக்கனாமிக் டைம்ஸ்ல இந்த கார்ட்டூன் பாத்தேன்.




எல்லா பாஸுமே இப்படி தான் இருப்பாங்க போல. நம்ம பாயிண்ட கொஞ்சம் சத்தமா சொன்னா தப்பாயிடுது. அதுக்குன்னு புடிச்சி தொங்கிக்கிட்டு இருக்கனுமா என்ன?

பேசத்தெரிஞ்சவங்க

ஒரு லட்ச ரூபாய் காரை மட்டந்தட்ட நினைச்சிருக்காரு சுசுகி. அதுக்கு நேக்கா பதில் குடுத்திருக்காங்க டாடா. பேசத்தெரிஞ்சவங்க.

In a veiled criticism of Tata Motors’ proposed Rs1 lakh car, Suzuki said the quest for lower pricing should not lead to a compromise in quality and safety norms. "In case there is a sacrifice on safety and emission norms, the manufacturer does not truly soldier the responsibility of an auto manufacturer,” he said.

Reacting to Suzuki’s remarks, a Tata spokesperson said: "As an auto manufacturer of more than 60 years' standing, Tata Motors is conscious of its responsibilities, and all its vehicles have met and will meet all the norms and regulations of the countries where they are marketed.

Source: Hindustan Times

Tuesday, December 11, 2007

ஆரம்பிசிட்டாங்கடா இங்கையும்

இங்கிலிஸ்காரன் மாதிரி டிரஸ் பண்றது மட்டுமில்ல... புதுச ஒண்ணும் ஆரம்பிச்சிருக்கோம் இப்ப நாங்க.... Boy shoots classmate...
8th grader took dad's gun...

Tuesday, November 06, 2007

மணி கேக்குறானாம் மணி

பேச்சு வழக்கில்:

என்னய பாத்தா மணிக்கூண்டு மாதிரி தெரியிதா இல்ல அலாரம் மாதிரி தெரியுதா... ராத்திரி சாப்பிட பேறப்பல்லாம் எதுத்த வீட்டு வாட்ச்மேன் என்கிட்ட டைம் கேக்குறான்... எப்படி அதே போஸ்ல மனுஷன் டெய்லி உக்காந்துருக்கானோ தெரியல...



தமிழில்:

என்னைப் பார்க்கையில் மணிக்கூண்டு போலவோ அல்லது விழிப்பான் போலவோ அவனுக்குத் தெரியலாம். இரவு உணவுக்காக தினமும் நான் போகையில் எதிர் வீட்டு காவலாளி, என்னிடம் மணி கேட்கிறான். எப்படி தினமும் ஒரே நிலையில் அமர்ந்திருக்க முடிகிறதோ அவனால்?



கவிதை நடையில்:
வரி வரியா அடுத்தடுத்து எழுதுவதும் கவிதை

குழம்பிய குட்டையில்
கல் எரிவதுன்
பொழுதுபோக்கா?
பல சிந்தனைகளாய்
கால் நடக்கிறேன்.
குறிபார்த்து கேட்கிறாய்
என்னையே தினமும்.
"மணி என்ன?".

நிதம் நான்
வருகிற நேரம்
உனக்கெப்படி சரியாகத்
தெரிந்திருக்கிறது?
கடிகாரம் இருக்காது
உன்னிடம்.
ஆனாலும் நீ
எதிர்வீட்டு "வாட்ச்"மேன்.



ஹைக்கூ வடிவில்:

இன்றும் என்னிடம்
மணி என்னவென்று
கேட்டார் "வாட்ச்"மேன்.

Monday, October 08, 2007

இன்னோரு ஹைக்கூஉஊ...



தாழப் பறக்கும்
தட்டான்பூச்சி...
முகத்தில் மழைத்துளி.

Tuesday, August 28, 2007

சிறந்த அறுபது புத்தகங்கள்?

இந்திய சுதந்திரதிற்கு பிறகு எழுதப்பட்ட சிறந்த அறுபது புத்தகங்கள் என்ற வரிசையில், சுந்தர ராமசாமி அவர்களின் "ஜே ஜே : சில குறிப்புகள்" மற்றும் பாமா அவர்களின் "கருக்கு" ஆகிய இரு தமிழ் நூல்கள் மட்டுமே இடம் பெற்றுள்ளன. இது, தரவரிசைப்படுத்திய அருந்ததி ராய் அவர்களின் அறிவுக்கு எட்டிய வரை மட்டுமே. அவருக்குத் தெரியாத எத்தனையோ சிறந்த பல நூல்கள் தமிழிலும் மற்ற மொழிகளிலும் இருக்ககூடும். *Conditions Apply என்றொரு Disclaimer கட்டுரையின் முடிவில் வைத்திருக்கலாம்.
(இவ்விரு தமிழ் நூல்களையும் படிக்கும் வாய்ப்புக்காகக் காத்திருக்கிறேன்.)

Wednesday, August 15, 2007

சாமியே நீதான் நாட்டக் காப்பத்தனும்

இன்று சுதந்திர தின விடுமுறைங்கறதால திருவண்ணாமலை கிரிவலம் வரலாம்னு இரவு 12.00 மணிக்கு பஸ் புடிச்சி கிளம்பினோம். நரேஷும் நானும். கிரிவலம் வருவதாக ஒரு வேண்டுதல். தள்ளிப்போகக் கூடாதுங்கறத்துக்காக போய்ட்டுவந்தேன். நரேஷும் வந்ததால நல்லபடியா முடிஞ்சி வந்த்தாச்சு.
ராஜகோபுரம் வழியா நுழைந்ததும் வலது புறத்துல என்ன விக்ரகம்னு கவனிக்க மறந்துட்டேன்.

ஆனா அந்த சாமி தான் நாட்டக் காப்பத்தனும்.


திருவண்ணாமலை புது பஸ் நிலையம் எதிரில் உள்ள கல்லறையில் கண்டது...
செத்தவங்களாயாவது சொகமா இருக்க விடுங்களேன். அதுல சேரு இது சேருன்னு... வேற எடமே இல்லயா விளம்பரம் பண்ண....

Sunday, July 29, 2007

குறி பாத்து சுடுங்கடா, டேய்!





"பூமா" - ஒரு மல்டிநேஷனல் கம்பெனின் விளம்பரத்தில், இந்திய கம்பெனியான "மாருதி ட்ரூ வேல்யூ"வின் லோகோ எப்படி?
1. பூமா கம்பெனி காதுல பூவ சுத்திட்டு, ஏதோ ஒரு சப்ப விளம்பர கம்பெனி இந்த விளம்பரத்தை டிசைன் பண்ணியிருக்கனும். இல்ல,
2. பூமா கம்பெனியே, பரவால்ல இந்த லோகோக்கு நல்ல மரியாதை இருக்கு. நம்மளும் இத சுட்டு பயன்படுத்திக்கலாம்னு நினைச்சிருக்கனும். இல்ல,
3. உண்மையாவே இந்த லோகோ மாருதியுடையதுன்னு, பூமாவிற்கும், விளம்பரக் கம்பெனிக்கும் தெரியாம இருக்கனும்....
குறி பாத்து சுடுங்கடா, டேய்!

Wednesday, July 25, 2007

சுப லாபம்



எங்களுக்கு எந்த லாபமும் இல்லை. நீங்கள் மட்டும் பயனடையுங்கள்.... இந்த மாதிரி வசனத்துக்கல்லாம் ஏமாற யாரும் தயாரா இல்ல.

"We Share our our profits with you..."
எங்களுக்கு கிடைக்கும் லாபத்தை உங்களுக்கு பகிர்ந்தளிக்கிறோம்னு சொன்னா நம்ப வாய்ப்பிருக்கு....

Monday, July 23, 2007

வந்துச்சிடா வாழ்வு....


இந்த ஆன்லைன் விளம்பரத்துல தமிழ் படும் பாட பாருங்க...

சிவசங்கர்கிட்ட கொஞ்ச நாள் முன்னாடி தான் சொல்லிட்டு இருந்தேன், இன்டெர்நெட்ல தமிழ் மற்றும் மற்ற இந்திய மொழி சம்மந்தமான வேலைகள் / தொழில்கள் / பிஸினஸ்கள் அதிகரிக்கும்னு. அதாவது பொழுதுபோக்காக அல்லது சிந்தனைகளை வெளிப்படுத்த எழுதுவவர்கள் அல்ல. இதை தொழிலாக செய்பவர்கள், உதாரணம் மொழிபெயர்ப்பாளர்கள் மற்றும் ப்ரூஃப் ரீடர்கள் வேலைக்கான தேவை அதிகரிக்கும்....

Friday, July 20, 2007

இப்ப என்னா சொல்ல வர்ற...

ஓட்டல் சர்வர் மற்றும் விவசாயி... இவங்க கைக்கு எட்டுவது வாய்க்கு எட்டாது...
சர்வர் எல்லாத்துக்கும் வகையான சாப்பாடு எடுத்துட்டு வந்து கொடுக்குறான், ஆனா அவனுக்கு அத்தைனயும் சாப்பிடக் கொடுத்துவக்கல....
விவசாயி பொன்னி, ஜீரகம்னு பயிர் பண்ணி பணக்காரங்க சாப்பிடகொடுக்கிறான், அவனுக்கு கொடுத்துவக்கல...

இப்ப என்னா சொல்ல வர்ற...

Sunday, July 15, 2007

மன்னிச்சிக்குங்க போலீஸ்கார்...

தெரியாமத்தான் கேக்குறேன்னு ரொம்ப டூமச்சா கேள்வி கேட்டுட்டேன். மன்னிச்சிக்குங்க போலீஸ்கார்...

இந்த போட்டோவ பாருங்க...



நம்ம கஷ்டப்பட்டு சம்பாரிச்ச காசு எப்படில்லாம் திருடு போற வாய்ப்பு இருக்குன்றத படம் போட்டு காமிச்சிருக்காங்க... இதப்படிச்சாவது நம்ம மக்கள் உஷாரா இருக்காங்களான்னு பாக்கனும். இந்த கிரியேட்டிவான ஐடியாவ பண்ணின டீமுக்கு பாராட்டு! பாராட்டு! பாராட்டு! மக்கள்ட நல்ல பேர் வாங்க இதே மாதிரி இன்னும் நிறைய பண்ணனும், போலீஸ் மேல நம்பிக்கைய கொண்டு வரனும்....

Monday, June 11, 2007

புதியதொரு விளம்பர ஊடகம்

நேத்து நரேஷ் ரூம்க்கு போயிருந்தேன். ஏதாவது இன்னொவேட்டிவா பண்ணனும்னு அவன்கிட்ட பேசிக்கிட்டு இருக்கும் ஒரு ஐடியா க்ளிக் ஆச்சு. அதாவது, இப்போ யாரோட மொபைல் போன்க்கு கால் பண்ணும் போது, நமக்கு சினிமா பாட்டு கேட்டற மாதிரி வசதி காலர் டியூன்ஸ் / ஹலோ டியூன்ஸ்ல இருக்கு. அதையே இன்னொரு கொஞ்சம் மாத்தி, யாருக்காவது போன் பண்ணினா விளம்பரம் கேட்குற மாதிரி வசதி பண்ணலாம். இதுக்கு ஈடா மாசா மாசம் ஒரு 30 இல்ல 50 ரூபாய் டாக்டைம் அந்த மொபைல் சப்ஸ்க்ரைபருக்கு சர்வீஸ் ப்ரொவைடர் கொடுக்கலாம். எந்த மாதிரியான பொருட்களுக்கான விளம்பரங்கள் வரலாம்னு மொபைல் சப்ஸ்க்ரைபரே தேர்ந்தெடுக்கும் வசதியும் வெக்கலாம்.

இன்னக்கி இல்லன்னாலும் வெகுசீக்கிரம் இந்த ஊடகம் பிரபலம் ஆகும்....

Wednesday, May 30, 2007

பயோமெட்ரிக் கிரெடிட் கார்ட்

ஒரு மீட்டிங்காக லேட்டாய்டுச்சேன்னு அவசரமா வண்டில போய்கிட்டு இருக்கும் போது, பாக்கெட்ல போன் அடிக்குது. வண்டிய ஓரங்கட்டிட்டு எடுத்துப்பாத்தா எதோ லாண்ட்லைன் நம்பர். சந்தேகத்தோட தான் ஆன்ஸர் பண்ணேன். "சார், எச் எஸ் பி சீ ல இருந்த்து கால் பண்றேன். லைப்டைம் ஃப்ரீ கார்டு ஆஃபர் பண்றோம்." ப்ளீஸ் வேண்டாம் என்ன விட்ருங்கன்னு சொல்லிட்டு கிளம்பினேன்.

கொஞ்ச தூரம் போனதும் ஒரு ஐடியா தோணிச்சு! ப்ளாஸ்டிக் கார்டுக்கு பதிலா பயோமெட்ரிக் கார்டு தந்தா என்ன. கடைங்கள்ல வெறும் நம்மோட கைரேகைய ஸ்கான் பண்ணி, பணம் செலுத்தற மாதிரி இருந்தா எப்படி இருக்கும்... இதிலயே ஆன்லைன் ஷாப்பிங், ஏடிஎம்ல அப்புறம் மத்த கடைங்கள்லயும் வெச்சா நல்லா இருக்கும்.

முதல்ல, நம்ம கார்டை வேற யாரும் திருட்டுத்தனமாக பயன்படுத்துறதை தவிர்க்கலாம்.

ரெண்டாவது, ஒவ்வொருத்தரும் பர்ஸ் நெறைய 10 - 20 கார்ட் வெச்சுக்கனும்னு அவசியம் இருக்காது. நம்ம கைரேகையே எல்லா கார்டுக்கும் ஒரே அடையாளம்.

மாஸ்டர் கார்டு, வீசா கார்டு அப்புறம் ஆமெக்ஸ்ல வேள செய்ற மூலக்காரனுங்க இதெல்லாம் யோசிக்காமலா இருப்பாங்க. அப்படி இல்லான்னா, சபீர் பாட்டியா, கூகுள், ஆர்குட் இல்ல யூ ட்யூப் மாதிரி டெக்னோப்ரெனருங்க சீக்கிரமே இதயும் செய்வாங்க சீக்கிரமே...

Saturday, April 28, 2007

இன்னக்கி World Cup Final...

இன்னக்கி wold cup final...
Pointing - Jayavadane foto பாத்துக்கிட்டிருந்த்தப்ப தோனியது...

செய்தித்தாள் விளையாட்டுப்பக்கத்தில்
சச்சின் படம்
Canon Camera விளம்பரம்.


எப்படி நம்ம ஹைக்கூஉஊஊ......

Saturday, March 17, 2007

புதுசு என்றாலும்...

"புதியது" என்ற வார்த்தை, எத்தனை நூற்றாண்டுகள் பழையது....

Wednesday, March 14, 2007

நான் எங்க போவேன்?

அவ நெனப்புல
அழுததை நெனச்சா
சிரிக்கத் தோணுது!

அவளோட சேந்து
சிரிச்சத நெனச்சா
அழுவயா வருது!

பாவி மக! இப்ப
சிரிக்கிறாளோ? அழுகுறாளோ?
அவ சிரிச்சிகிருந்தா சொர்க்கம்;
அழுதா நரகம் போவேன்!

-
-
-
வேற ஒருத்தன கல்யாணம் பண்ணாலும் அவ நல்ல இருக்கணும்னு வேண்டிக்கிறோமே, அவளவிட ஒரு நல்ல பொண்ணா நமக்கு கிடக்கணும்னு எவளாவது யோசிப்பாளா?

Wednesday, January 03, 2007

மகாபாரதம். பாடியவர்: மரண கானா விஜி

"நீ பெருசுங்கிறே, அவன் சிறுசுங்கிறே...
நீ வஸ்தாதுங்கிறே, அவன் பிஸ்கோத்துங்கிறே,
செத்தா எவன் எங்க போவான் யாருக்குத் தெரியும்?
நிலையில்லாத வாழ்வுடா, நினைத்துப் பாரு மானுடா,
நாலு பேரு சொமக்குறான், நடுவில் ஒருவன் படுக்குறான்,

மாண்டு போன மனிதனே...
மரணம் சொகமா இருக்குதா?
தூக்கிச் சொமக்கும் மனிதனே...
சாவு சொமையா இருக்குதா?
இன்னிக்கிவர செத்தவனும் பதில் சொல்லல,
மத்தவனும் பதில் சொல்லல..."


மரண கானா விஜி சாவுக்கு படிக்கிற கானா இது.

சி. இராஜகோபாலாச்சாரி அவர்களின் மகாபாரதம் 5 வருஷம் முன்னாடி படிச்சிட்டு, எங்க அம்மாயிக்கிட்ட நான் சொன்னது இன்னும் நல்லா ஞாபகம் இருக்கு. இதப் படிச்சவன் எவனும் சக மனுஷனோட சண்ட போட மாட்டான்னு. திரும்ப படிக்கனும்னு ரொம்ப நாளா புத்தகத்த தேடிக்கிட்டிருக்கேன். மேல இருக்க கானா பாட்ட ஆனந்தவிகடன் 27.12.06 இதழ்ல படிச்சதும் மகாபாரதம் படிச்ச அதே உணர்வு.