Wednesday, January 03, 2007

மகாபாரதம். பாடியவர்: மரண கானா விஜி

"நீ பெருசுங்கிறே, அவன் சிறுசுங்கிறே...
நீ வஸ்தாதுங்கிறே, அவன் பிஸ்கோத்துங்கிறே,
செத்தா எவன் எங்க போவான் யாருக்குத் தெரியும்?
நிலையில்லாத வாழ்வுடா, நினைத்துப் பாரு மானுடா,
நாலு பேரு சொமக்குறான், நடுவில் ஒருவன் படுக்குறான்,

மாண்டு போன மனிதனே...
மரணம் சொகமா இருக்குதா?
தூக்கிச் சொமக்கும் மனிதனே...
சாவு சொமையா இருக்குதா?
இன்னிக்கிவர செத்தவனும் பதில் சொல்லல,
மத்தவனும் பதில் சொல்லல..."


மரண கானா விஜி சாவுக்கு படிக்கிற கானா இது.

சி. இராஜகோபாலாச்சாரி அவர்களின் மகாபாரதம் 5 வருஷம் முன்னாடி படிச்சிட்டு, எங்க அம்மாயிக்கிட்ட நான் சொன்னது இன்னும் நல்லா ஞாபகம் இருக்கு. இதப் படிச்சவன் எவனும் சக மனுஷனோட சண்ட போட மாட்டான்னு. திரும்ப படிக்கனும்னு ரொம்ப நாளா புத்தகத்த தேடிக்கிட்டிருக்கேன். மேல இருக்க கானா பாட்ட ஆனந்தவிகடன் 27.12.06 இதழ்ல படிச்சதும் மகாபாரதம் படிச்ச அதே உணர்வு.