Thursday, December 24, 2009

பொண்ணு எந்த ஊரு?

ஒன்னரை மணி நேரமா வரிசைல நின்னு டிக்கெட் வாங்கறப்போ கூட கால் வலிக்கல. ஆனா பின்னாடி ஒருத்தர் செல்போன்ல சத்தமா பேசி காது வலிதான் உயிர் போகுது. MSc(IT) முடிச்சுட்டு சாப்ட்வேர் கம்பெனில வேலை செய்றானாம் பையன் பெங்களூர்ல. அவனுக்கு பொண்ணு நல்ல இடமா பார்க்கச்சொல்லிட்டிருந்தார். பொண்ணு ITல வேலை செய்யக்கூடாதுன்றது பையனோட விருப்பம். திரும்பவும் எல்லாத்தையும் வீட்டுக்கு அனுப்பினாங்கன்ன, ஒருத்தராவது சம்பாரிக்கனுமே. ரொம்ப விவரம்தான்.
நல்ல வேலை அந்த புத்திசாலிக்கு இந்த ஐடியா வரல..2012ல உலகம் அழிய போகுதுன்னு, ஒரு வேற்று கிரகவாசிய கல்யாணம் செஞ்சுக்கிட்டா பிரச்சனை வரும்போது அங்க போயிடலாமில்லையா..

Thursday, December 17, 2009

நல்ல காலம் பொறக்குது.. (அ) நேரம் சரியில்லையோ...

எனக்கு மட்டும் ஏன் இதுமாதிரி நடக்கும்னு தெரியல.. இல்ல உங்களுக்கும் இப்படித்தானா? சில வருஷங்களுக்கு அப்புறம் இதுபோல திரும்பவும் நடக்குது. இது சில சமயம் ஒரு நல்ல விஷயம்னு நினைப்பேன். சில நேரம் பாக்கும் போதே பயமா இருக்கும். ஒருதடவை ரெண்டு தடவை நடந்தா ஒரு தற்செயலான நிகழ்வுன்னு விட்டுடலாம். ஆன இது வருஷக் கணக்கா நடக்குது. நடக்குது நடக்குதுன்னா அப்படி என்னதான்டா நடக்குது?
ஒன்னுமில்ல.. நான் டிஜிட்டல் கடிகாரங்களில் நேரம் பார்க்கும் போது, எண்கள் இரட்டையாக தெரிகின்றன இதுபோல..
01:01, 02:02, 03:03, 04:04 ........ 11:11, 12:12
உங்களுக்கும் தெரிவதுண்டா இதுபோல?

Friday, November 20, 2009

நாளை முதல் நான் அற்பனில்லை..

காய்கறி வாங்கி வர அண்ணாநகர் கோவை பழமுதிர் வரை அருணும் நானும் போயிருந்தோம். பெங்களூர் கமெர்சியல் ஸ்ட்ரீட்டில் பார்த்த National Geographic's Bring Your Own Bag (BYOB) Campaign ஞாபகம் வர, துணிக்கடைகளில் கொடுக்கும் பையை எடுத்துச் செல்ல நினைத்திருந்தேன். நினைத்ததோடு சரி, போகையில் மறந்துவிட்டேன். பைகளை எடுத்து வருபவர்களுக்கு இரண்டு ரூபாய் தள்ளுபடியை, இதுபோன்ற காய்கறி கடைக்காரர்களும், ஸ்பென்சர்ஸ், மோர், ரிலையன்ஸ் போன்ற சூப்பர் மார்க்கெட்களும் தரலாம். பிளாஸ்டிக் பைகளின் உபயோகம் குறையும். சாக்கடைகளும் மழைநீர் வடிகால்களும் அடைத்துக்கொண்டு ஊர் நாறுவது பிளாஸ்டிக் பைகளால் தான். இரண்டு ரூபாய் தள்ளுபடி தருவதைவிட பிளாஸ்டிக் பைக்கு ஐந்து ரூபாய் வீதம் கூடுதலாக வசூலித்தால் Bring Your Own Bag நடைமுறைக்கு வரும். அதுவரை பிளாஸ்டிக் பையை கடைக்காரன் ஓசியாத்தரானே என்று வெறுங்கையை வீசிக்கொண்டு கடைக்கு வரும் அற்பங்களை நொந்துகொள்ள முடியாது.