ஒன்னரை மணி நேரமா வரிசைல நின்னு டிக்கெட் வாங்கறப்போ கூட கால் வலிக்கல. ஆனா பின்னாடி ஒருத்தர் செல்போன்ல சத்தமா பேசி காது வலிதான் உயிர் போகுது. MSc(IT) முடிச்சுட்டு சாப்ட்வேர் கம்பெனில வேலை செய்றானாம் பையன் பெங்களூர்ல. அவனுக்கு பொண்ணு நல்ல இடமா பார்க்கச்சொல்லிட்டிருந்தார். பொண்ணு ITல வேலை செய்யக்கூடாதுன்றது பையனோட விருப்பம். திரும்பவும் எல்லாத்தையும் வீட்டுக்கு அனுப்பினாங்கன்ன, ஒருத்தராவது சம்பாரிக்கனுமே. ரொம்ப விவரம்தான்.
நல்ல வேலை அந்த புத்திசாலிக்கு இந்த ஐடியா வரல..2012ல உலகம் அழிய போகுதுன்னு, ஒரு வேற்று கிரகவாசிய கல்யாணம் செஞ்சுக்கிட்டா பிரச்சனை வரும்போது அங்க போயிடலாமில்லையா..