Tuesday, August 28, 2007

சிறந்த அறுபது புத்தகங்கள்?

இந்திய சுதந்திரதிற்கு பிறகு எழுதப்பட்ட சிறந்த அறுபது புத்தகங்கள் என்ற வரிசையில், சுந்தர ராமசாமி அவர்களின் "ஜே ஜே : சில குறிப்புகள்" மற்றும் பாமா அவர்களின் "கருக்கு" ஆகிய இரு தமிழ் நூல்கள் மட்டுமே இடம் பெற்றுள்ளன. இது, தரவரிசைப்படுத்திய அருந்ததி ராய் அவர்களின் அறிவுக்கு எட்டிய வரை மட்டுமே. அவருக்குத் தெரியாத எத்தனையோ சிறந்த பல நூல்கள் தமிழிலும் மற்ற மொழிகளிலும் இருக்ககூடும். *Conditions Apply என்றொரு Disclaimer கட்டுரையின் முடிவில் வைத்திருக்கலாம்.
(இவ்விரு தமிழ் நூல்களையும் படிக்கும் வாய்ப்புக்காகக் காத்திருக்கிறேன்.)

Wednesday, August 15, 2007

சாமியே நீதான் நாட்டக் காப்பத்தனும்

இன்று சுதந்திர தின விடுமுறைங்கறதால திருவண்ணாமலை கிரிவலம் வரலாம்னு இரவு 12.00 மணிக்கு பஸ் புடிச்சி கிளம்பினோம். நரேஷும் நானும். கிரிவலம் வருவதாக ஒரு வேண்டுதல். தள்ளிப்போகக் கூடாதுங்கறத்துக்காக போய்ட்டுவந்தேன். நரேஷும் வந்ததால நல்லபடியா முடிஞ்சி வந்த்தாச்சு.
ராஜகோபுரம் வழியா நுழைந்ததும் வலது புறத்துல என்ன விக்ரகம்னு கவனிக்க மறந்துட்டேன்.

ஆனா அந்த சாமி தான் நாட்டக் காப்பத்தனும்.


திருவண்ணாமலை புது பஸ் நிலையம் எதிரில் உள்ள கல்லறையில் கண்டது...
செத்தவங்களாயாவது சொகமா இருக்க விடுங்களேன். அதுல சேரு இது சேருன்னு... வேற எடமே இல்லயா விளம்பரம் பண்ண....