Sunday, December 31, 2006

நாசிம்மனும் நானும்

பள்ளிக்கூடம் படிக்கும் போது மகாபலிபுரம் கூட்டிட்டுப் போனாங்க. அதுக்கப்புறம் ஒரு 15 வருஷம் கழிச்சி இப்போதான் போறேன். அந்த யானயும், நந்தியும் ஞாபகமிருக்கு.மத்ததெல்லாம் புதுசாதான் தெரியுது.
பள்ளிக்கூடத்துல சொல்லிக்குடுத்தாங்களான்னு தெரியல. ஆனா எனக்கு நிறைய சந்தேகம் இப்போ இருக்கு.

ரெண்டு கோபுரத்துல சின்னதுல கலசத்த உடச்சது யாரு? இல்ல செய்யும் போதே இப்படித்தான் செஞ்சாங்களா?

இந்த போட்டோவுல தெரியரது ஏதோ இயந்திரத்தை வச்ச இடம்மாதிரி இருக்கு. பள்ளம் சரியான சமதளம். அந்த காலத்துல கண்டிப்பா ரொம்ப சிரமப்பட்டு செஞ்சிருப்பாங்க.

படிப்பதற்கு வசதியாக கீழுள்ள இரு படங்களையும் க்ளிக் செய்து கொள்ளவும்.

ப்ளம்பர் அந்தோனி

விஷேசமான போட்டோ:

ப்ளம்மர் அந்தோனி எதுக்காக வெங்கடாஜலபதி படத்த போட்டாரு?

எத்தன பேருடா கிளம்பிருக்கீங்க?

மெட்ராஸ் வந்து ஒரு வருஷத்துக்கும் மேல ஆகுது. இப்போதான் மகாபலிபுரம் போக வாய்ச்சிருக்கு. அத்தை பசங்க ஸ்கூல் லீவுக்கு இங்க வந்தாங்க. அவங்களோட போயிருந்தேன். கோயம்பேட்லருந்து பஸ். சீட் புடிச்சி வசதியா உக்காந்ததும் ஒருத்தன் வந்து நோட்டீஸ மடில வெச்சிட்டுப் போனான்.

குஜராத்ல பூகம்பம் 2001ல வந்துச்சு. இப்போ 2007. முழுசா 6 வருஷமாச்சு அவன் தமிழ்நாடு வந்து. ஒரு ஊருல குடியேறி 6 வருஷத்துல பொழக்க வழிகண்டுபுடிக்க தெரியாத வக்கத்தவனுக்கு உதவி செய்ய மனசு வரல. இல்ல அடுத்தவங்க அனுதாபத்த கீறி பொழக்கறதயே பொழப்பா வச்சிருக்கானா தெறியல.
ஒரு ரூபா குடுக்க மனசில்ல. நீ என்னாத்துக்கு இந்த பேச்சி பேசிறன்னு கேக்கறீங்களா? நானுங்குடுத்தேன். ஒர்ரூபா ரெண்ரூபா இல்ல. முழுசா 100 ரூபா நோட்டு. 2000மாவது வருஷம். என் தாத்தா இறந்துட்டாருன்னு போன் வந்து பஸ் புடிச்சி போய்க்கிட்டு இருக்கேன். பக்கத்து சீட்ல உக்காந்த ஒரு 40 வயசு ஆளு, தான் ஒரு ஆடிட்டர்னும், ஒரு ஆஸ்ரமத்லர்ந்து வீட்டுக்குப் போறதாவும், பொண்டாட்டி மனநிலை சரியிள்ளாதவங்கன்னும், பஸ்க்கு காசு குடுத்தா ஊருக்குப்போய் மணியார்டர் அனுப்பறதாவும் சொன்ன பேச்ச நம்மி 100 ரூபா நோட்ட குடுத்தேன். கூடவே அட்ரசும் குடுத்திருந்தேன். வருஷம் 7 ஆச்சி. இன்னும் மணியார்டர் வரல.
இந்த அனுபவத்தோட நான் எப்படி இந்த குஜராத்காரனுக்கு 1 ரூபா குடுக்கறது.

Wednesday, December 20, 2006

மீட்டருக்கு மேல...

அரசு சுயதம்பட்டம் அடித்துக்கொள்ளும் விளம்பரங்களை விடுத்து இது போன்ற பயனுள்ளவைகளையிட்டால்?....

ஜெயலலிதாவை சொன்னால் தி.மு.க ஆதரவாளனென்றும் கருணாநிதியை சொன்னால் அ.தி.மு.க ஆதரவாளனென்றும் என்னை நீங்கள் நிணைக்கக்கூடும் என்பதால், வசுந்தராராஜே!

Tuesday, December 19, 2006

ரஜினியின் முதுகில் சவாரி



சென்னையில் ஹோர்டிங்களில், தினத்தந்தி பேப்பரில் இந்த விளம்பரங்களைப் ஒரு வாரமாகப் பார்க்க முடிகிறது. தினத்தந்தி, மாலைமலர் குழுமத்தைச் சேர்ந்த "ஹலோ FM"ன் விளம்பரம். இந்த விளம்பரதை வெளியிட்டிருக்கும் FM ரேடியோவிற்கு முதுகெழும்பு இல்லாததையே இவ்விளம்பரம் தெளிவுபடுத்துகிறது. ரஜினிகாந்த், கமல் போன்ற ஹீரோக்களின் Brand Equityயை கள்ளத்தனமாக பயன்படுத்தி அவர்கள் முதுகில் சவாரி செய்ய நினைத்திருப்பது அற்பத்தனம். இந்த விளம்பரத்தைத் தயாரித்திருக்கும் பிரபலமான விளம்பர கம்பெனியில் கற்பனை தீர்ந்துவிட்டதா இல்லை "ஹலோ FM" குழுமத்தின் ரசணை இவ்வளவு மட்டமானதா?

Monday, December 11, 2006

தெரியாமத்தான் கேக்குறேன்!


தெரியாமத்தான் கேக்குறேன்!
நான் தப்பு பண்ணினா போலீஸ் கேப்பாங்க. போலீஸ் தப்பு பண்ணினா நாம கேட்கக் கூடாதா? சட்டத்தில இதுக்கு இடமில்லயா? நாம கேட்கக் கூடாதுன்னா அப்ப யார் கேட்கலாம்?

Saturday, December 09, 2006

எனக்கொரு உண்மை தெரிஞ்சாகனும்!

சிவசங்கர் தத்துவம் மாதிரியான ஒன்ன மெயில்ல அனுப்பிச்சிருந்தான். அத நீங்களும் தான் பாருங்களேன்.

கீழிருக்கும் வரி உண்மை.
மேலிருக்கும் வரி பொய்.


என்னடா இது ஒரே தத்துவார்த்தமா இருக்கே. ஒன்னும் புரியலயே!

அது உண்மை.
இது பொய்.
அப்போ அது பொய்,
இது உண்மை.
அப்படின்னா அது உண்மை...
இது பொய்.
சரி.. அப்போ அது பொய்...
இது உண்மை.
இது உண்மைன்னா அது பொய்.
அது பொய்ன்னா இது உண்மை.
அய்யோ!!!
டேங்ங்கொம்**... ஓங் குசும்புக்கு அளவேயில்லயா... வருவல்ல... அப்ப அடிக்கிறேன்டா ஆப்பு...

இது எந்த வகையிலும் சேராத ஒரு படைப்பு.
நீங்களும் வையுங்க சிவசங்கருக்கு ஆப்பு.

("குறும்பு" என்ற தலைப்பில் தேன்கூடு போட்டிக்காக)

Monday, December 04, 2006

முப்பது நாட்களில் இந்தி பாஷை

இந்தி இனிய மொழி தான்.
மறுக்கவில்லை நான்.
பள்ளி வயதில் திணிக்கப்பட்டேன்.
திமிறினேன்.

வேலைதேடி நண்பனுடன் டில்லி செல்ல திட்டம்.
தமிழகத்தை தாண்டி முதல் பயணம்.

"முப்பது நாட்களில் இந்தி பாஷை"யை ரயிலிலமர்ந்து
மூன்றே நாளில் முடிக்கவெண்ணி தோற்றேன்.

அழகு தான் டில்லி.
கேட்காத ஒலியில், பார்க்காத வடிவத்தில் புதிய மொழி.
கூர்மையான காதுகள், கண்கள் தந்தது டில்லி.

முப்பது நாளில் இந்தி பாஷை
எளிதாய் வந்தது.

வேலைதேடி ஓய்ந்த வேலையில்
இந்தி சொல்லித்தந்தேன் தமிழர்க்கு
தமிழ் தந்தேன் "இந்தி"யருக்கு.


1. இந்தி கற்பது எளிது.
தேவைப்படும் போது கற்றுக் கொள்ளலாம். தமிழ்க் குழந்தைகள் ப்ராத்மிக் படித்து சாதிக்கக்கூடியது எதுவுமில்லை (சான்றிதழ் சேர்ப்பது தவிற). குழந்தைகள் வளர்ந்ததும் தேவையான மொழியை தானே கற்றுக் கொள்ளும்.
எதிர்காலத்தில் என் குழந்தைக்கு வடநாட்டில் வேலை கிடைத்தால் என்ன செய்வது என்று கேட்போருக்காக: தங்கள் குழந்தைக்கு ஜாப்பனீஸும் கற்றுக் கொடுங்கள். உலகமயமாக்களில் ஜப்பானிலும் வேலை கிடைக்கலாம்.

2. தமிழை இந்தி குழந்தைகளுக்கு சொல்லித்தருவதும் எளிது.
ஒவ்வொரு இந்தி கற்ற தமிழனும் ஒரு குழந்தைக்குத் தமிழைக் கற்றுத்தர உறுதியெடுக்கலாம். குறைந்தபட்சம் தமிழ் மீது பற்று அல்லது விருப்பம் ஏற்படுத்தலாம்.

குறிப்பு: இந்த பதிவை தேசிகன் சாரின் "तमिल" என்ற பதிவிற்கு பின்னூட்டமாகவும் வாசிக்கலாம்.