Sunday, December 31, 2006

நாசிம்மனும் நானும்

பள்ளிக்கூடம் படிக்கும் போது மகாபலிபுரம் கூட்டிட்டுப் போனாங்க. அதுக்கப்புறம் ஒரு 15 வருஷம் கழிச்சி இப்போதான் போறேன். அந்த யானயும், நந்தியும் ஞாபகமிருக்கு.மத்ததெல்லாம் புதுசாதான் தெரியுது.
பள்ளிக்கூடத்துல சொல்லிக்குடுத்தாங்களான்னு தெரியல. ஆனா எனக்கு நிறைய சந்தேகம் இப்போ இருக்கு.

ரெண்டு கோபுரத்துல சின்னதுல கலசத்த உடச்சது யாரு? இல்ல செய்யும் போதே இப்படித்தான் செஞ்சாங்களா?

இந்த போட்டோவுல தெரியரது ஏதோ இயந்திரத்தை வச்ச இடம்மாதிரி இருக்கு. பள்ளம் சரியான சமதளம். அந்த காலத்துல கண்டிப்பா ரொம்ப சிரமப்பட்டு செஞ்சிருப்பாங்க.

படிப்பதற்கு வசதியாக கீழுள்ள இரு படங்களையும் க்ளிக் செய்து கொள்ளவும்.

No comments: