Saturday, December 09, 2006

எனக்கொரு உண்மை தெரிஞ்சாகனும்!

சிவசங்கர் தத்துவம் மாதிரியான ஒன்ன மெயில்ல அனுப்பிச்சிருந்தான். அத நீங்களும் தான் பாருங்களேன்.

கீழிருக்கும் வரி உண்மை.
மேலிருக்கும் வரி பொய்.


என்னடா இது ஒரே தத்துவார்த்தமா இருக்கே. ஒன்னும் புரியலயே!

அது உண்மை.
இது பொய்.
அப்போ அது பொய்,
இது உண்மை.
அப்படின்னா அது உண்மை...
இது பொய்.
சரி.. அப்போ அது பொய்...
இது உண்மை.
இது உண்மைன்னா அது பொய்.
அது பொய்ன்னா இது உண்மை.
அய்யோ!!!
டேங்ங்கொம்**... ஓங் குசும்புக்கு அளவேயில்லயா... வருவல்ல... அப்ப அடிக்கிறேன்டா ஆப்பு...

இது எந்த வகையிலும் சேராத ஒரு படைப்பு.
நீங்களும் வையுங்க சிவசங்கருக்கு ஆப்பு.

("குறும்பு" என்ற தலைப்பில் தேன்கூடு போட்டிக்காக)

1 comment:

ஜி said...

ஆஹா!

என்னய்யா வெளாட்டு இது! கொஞ்ச நேரத்துலேயே, தல சுத்த வச்சிட்டிய!

வாழ்த்துக்கள் தல