Monday, December 04, 2006

முப்பது நாட்களில் இந்தி பாஷை

இந்தி இனிய மொழி தான்.
மறுக்கவில்லை நான்.
பள்ளி வயதில் திணிக்கப்பட்டேன்.
திமிறினேன்.

வேலைதேடி நண்பனுடன் டில்லி செல்ல திட்டம்.
தமிழகத்தை தாண்டி முதல் பயணம்.

"முப்பது நாட்களில் இந்தி பாஷை"யை ரயிலிலமர்ந்து
மூன்றே நாளில் முடிக்கவெண்ணி தோற்றேன்.

அழகு தான் டில்லி.
கேட்காத ஒலியில், பார்க்காத வடிவத்தில் புதிய மொழி.
கூர்மையான காதுகள், கண்கள் தந்தது டில்லி.

முப்பது நாளில் இந்தி பாஷை
எளிதாய் வந்தது.

வேலைதேடி ஓய்ந்த வேலையில்
இந்தி சொல்லித்தந்தேன் தமிழர்க்கு
தமிழ் தந்தேன் "இந்தி"யருக்கு.


1. இந்தி கற்பது எளிது.
தேவைப்படும் போது கற்றுக் கொள்ளலாம். தமிழ்க் குழந்தைகள் ப்ராத்மிக் படித்து சாதிக்கக்கூடியது எதுவுமில்லை (சான்றிதழ் சேர்ப்பது தவிற). குழந்தைகள் வளர்ந்ததும் தேவையான மொழியை தானே கற்றுக் கொள்ளும்.
எதிர்காலத்தில் என் குழந்தைக்கு வடநாட்டில் வேலை கிடைத்தால் என்ன செய்வது என்று கேட்போருக்காக: தங்கள் குழந்தைக்கு ஜாப்பனீஸும் கற்றுக் கொடுங்கள். உலகமயமாக்களில் ஜப்பானிலும் வேலை கிடைக்கலாம்.

2. தமிழை இந்தி குழந்தைகளுக்கு சொல்லித்தருவதும் எளிது.
ஒவ்வொரு இந்தி கற்ற தமிழனும் ஒரு குழந்தைக்குத் தமிழைக் கற்றுத்தர உறுதியெடுக்கலாம். குறைந்தபட்சம் தமிழ் மீது பற்று அல்லது விருப்பம் ஏற்படுத்தலாம்.

குறிப்பு: இந்த பதிவை தேசிகன் சாரின் "तमिल" என்ற பதிவிற்கு பின்னூட்டமாகவும் வாசிக்கலாம்.

No comments: