Sunday, December 31, 2006

எத்தன பேருடா கிளம்பிருக்கீங்க?

மெட்ராஸ் வந்து ஒரு வருஷத்துக்கும் மேல ஆகுது. இப்போதான் மகாபலிபுரம் போக வாய்ச்சிருக்கு. அத்தை பசங்க ஸ்கூல் லீவுக்கு இங்க வந்தாங்க. அவங்களோட போயிருந்தேன். கோயம்பேட்லருந்து பஸ். சீட் புடிச்சி வசதியா உக்காந்ததும் ஒருத்தன் வந்து நோட்டீஸ மடில வெச்சிட்டுப் போனான்.

குஜராத்ல பூகம்பம் 2001ல வந்துச்சு. இப்போ 2007. முழுசா 6 வருஷமாச்சு அவன் தமிழ்நாடு வந்து. ஒரு ஊருல குடியேறி 6 வருஷத்துல பொழக்க வழிகண்டுபுடிக்க தெரியாத வக்கத்தவனுக்கு உதவி செய்ய மனசு வரல. இல்ல அடுத்தவங்க அனுதாபத்த கீறி பொழக்கறதயே பொழப்பா வச்சிருக்கானா தெறியல.
ஒரு ரூபா குடுக்க மனசில்ல. நீ என்னாத்துக்கு இந்த பேச்சி பேசிறன்னு கேக்கறீங்களா? நானுங்குடுத்தேன். ஒர்ரூபா ரெண்ரூபா இல்ல. முழுசா 100 ரூபா நோட்டு. 2000மாவது வருஷம். என் தாத்தா இறந்துட்டாருன்னு போன் வந்து பஸ் புடிச்சி போய்க்கிட்டு இருக்கேன். பக்கத்து சீட்ல உக்காந்த ஒரு 40 வயசு ஆளு, தான் ஒரு ஆடிட்டர்னும், ஒரு ஆஸ்ரமத்லர்ந்து வீட்டுக்குப் போறதாவும், பொண்டாட்டி மனநிலை சரியிள்ளாதவங்கன்னும், பஸ்க்கு காசு குடுத்தா ஊருக்குப்போய் மணியார்டர் அனுப்பறதாவும் சொன்ன பேச்ச நம்மி 100 ரூபா நோட்ட குடுத்தேன். கூடவே அட்ரசும் குடுத்திருந்தேன். வருஷம் 7 ஆச்சி. இன்னும் மணியார்டர் வரல.
இந்த அனுபவத்தோட நான் எப்படி இந்த குஜராத்காரனுக்கு 1 ரூபா குடுக்கறது.

No comments: