பேச்சு வழக்கில்:
என்னய பாத்தா மணிக்கூண்டு மாதிரி தெரியிதா இல்ல அலாரம் மாதிரி தெரியுதா... ராத்திரி சாப்பிட பேறப்பல்லாம் எதுத்த வீட்டு வாட்ச்மேன் என்கிட்ட டைம் கேக்குறான்... எப்படி அதே போஸ்ல மனுஷன் டெய்லி உக்காந்துருக்கானோ தெரியல...
தமிழில்:
என்னைப் பார்க்கையில் மணிக்கூண்டு போலவோ அல்லது விழிப்பான் போலவோ அவனுக்குத் தெரியலாம். இரவு உணவுக்காக தினமும் நான் போகையில் எதிர் வீட்டு காவலாளி, என்னிடம் மணி கேட்கிறான். எப்படி தினமும் ஒரே நிலையில் அமர்ந்திருக்க முடிகிறதோ அவனால்?
கவிதை நடையில்:
வரி வரியா அடுத்தடுத்து எழுதுவதும் கவிதை
குழம்பிய குட்டையில்
கல் எரிவதுன்
பொழுதுபோக்கா?
பல சிந்தனைகளாய்
கால் நடக்கிறேன்.
குறிபார்த்து கேட்கிறாய்
என்னையே தினமும்.
"மணி என்ன?".
நிதம் நான்
வருகிற நேரம்
உனக்கெப்படி சரியாகத்
தெரிந்திருக்கிறது?
கடிகாரம் இருக்காது
உன்னிடம்.
ஆனாலும் நீ
எதிர்வீட்டு "வாட்ச்"மேன்.
ஹைக்கூ வடிவில்:
இன்றும் என்னிடம்
மணி என்னவென்று
கேட்டார் "வாட்ச்"மேன்.
வெறுமனே ஏதாவது எழுதனும்னு நினை நிணை நினைத்தேனுக்கு எத்தனை சுழின்னு கூட மறந்து போய்டுச்சு. சரி தமிழை மறக்காம இருக்கவாவது எழுதலாம்.
Tuesday, November 06, 2007
Monday, October 08, 2007
Tuesday, August 28, 2007
சிறந்த அறுபது புத்தகங்கள்?
இந்திய சுதந்திரதிற்கு பிறகு எழுதப்பட்ட சிறந்த அறுபது புத்தகங்கள் என்ற வரிசையில், சுந்தர ராமசாமி அவர்களின் "ஜே ஜே : சில குறிப்புகள்" மற்றும் பாமா அவர்களின் "கருக்கு" ஆகிய இரு தமிழ் நூல்கள் மட்டுமே இடம் பெற்றுள்ளன. இது, தரவரிசைப்படுத்திய அருந்ததி ராய் அவர்களின் அறிவுக்கு எட்டிய வரை மட்டுமே. அவருக்குத் தெரியாத எத்தனையோ சிறந்த பல நூல்கள் தமிழிலும் மற்ற மொழிகளிலும் இருக்ககூடும். *Conditions Apply என்றொரு Disclaimer கட்டுரையின் முடிவில் வைத்திருக்கலாம்.
(இவ்விரு தமிழ் நூல்களையும் படிக்கும் வாய்ப்புக்காகக் காத்திருக்கிறேன்.)
(இவ்விரு தமிழ் நூல்களையும் படிக்கும் வாய்ப்புக்காகக் காத்திருக்கிறேன்.)
Wednesday, August 15, 2007
சாமியே நீதான் நாட்டக் காப்பத்தனும்
இன்று சுதந்திர தின விடுமுறைங்கறதால திருவண்ணாமலை கிரிவலம் வரலாம்னு இரவு 12.00 மணிக்கு பஸ் புடிச்சி கிளம்பினோம். நரேஷும் நானும். கிரிவலம் வருவதாக ஒரு வேண்டுதல். தள்ளிப்போகக் கூடாதுங்கறத்துக்காக போய்ட்டுவந்தேன். நரேஷும் வந்ததால நல்லபடியா முடிஞ்சி வந்த்தாச்சு.
ராஜகோபுரம் வழியா நுழைந்ததும் வலது புறத்துல என்ன விக்ரகம்னு கவனிக்க மறந்துட்டேன்.

ஆனா அந்த சாமி தான் நாட்டக் காப்பத்தனும்.


திருவண்ணாமலை புது பஸ் நிலையம் எதிரில் உள்ள கல்லறையில் கண்டது...
செத்தவங்களாயாவது சொகமா இருக்க விடுங்களேன். அதுல சேரு இது சேருன்னு... வேற எடமே இல்லயா விளம்பரம் பண்ண....
ராஜகோபுரம் வழியா நுழைந்ததும் வலது புறத்துல என்ன விக்ரகம்னு கவனிக்க மறந்துட்டேன்.

ஆனா அந்த சாமி தான் நாட்டக் காப்பத்தனும்.


திருவண்ணாமலை புது பஸ் நிலையம் எதிரில் உள்ள கல்லறையில் கண்டது...
செத்தவங்களாயாவது சொகமா இருக்க விடுங்களேன். அதுல சேரு இது சேருன்னு... வேற எடமே இல்லயா விளம்பரம் பண்ண....
Sunday, July 29, 2007
குறி பாத்து சுடுங்கடா, டேய்!


"பூமா" - ஒரு மல்டிநேஷனல் கம்பெனின் விளம்பரத்தில், இந்திய கம்பெனியான "மாருதி ட்ரூ வேல்யூ"வின் லோகோ எப்படி?
1. பூமா கம்பெனி காதுல பூவ சுத்திட்டு, ஏதோ ஒரு சப்ப விளம்பர கம்பெனி இந்த விளம்பரத்தை டிசைன் பண்ணியிருக்கனும். இல்ல,
2. பூமா கம்பெனியே, பரவால்ல இந்த லோகோக்கு நல்ல மரியாதை இருக்கு. நம்மளும் இத சுட்டு பயன்படுத்திக்கலாம்னு நினைச்சிருக்கனும். இல்ல,
3. உண்மையாவே இந்த லோகோ மாருதியுடையதுன்னு, பூமாவிற்கும், விளம்பரக் கம்பெனிக்கும் தெரியாம இருக்கனும்....
குறி பாத்து சுடுங்கடா, டேய்!
Subscribe to:
Posts (Atom)
