Friday, January 27, 2017

ஜெயகாந்தன் எழுத்துகள்

முன்னெபோதோ ஜெயகாந்தனின் 'சில நேரங்களில் சில மனிதர்கள்' நாவல் படித்திருந்ததும், அது பிடித்திருந்ததும் ஞாபகம். விகடன் வெளியீடான 'ஜெயகாந்தன் கதைகள்' புத்தகமும், கவிதா வெளியீடான 'ஜெயகாந்தன் முத்திரைக் கதைகள்' புத்தகமும் இன்று வாங்கினேன். 'யுகசந்தி', 'சீட்டாட்டம்', 'விழுதுகள்' மற்றும் 'பிரளயம்' ஆகிய கதைகள் படித்தேன். இவ்வளவு நாளும் அவரைப் படிக்காதுபோனது வருத்தம். இனி விடப்போவதில்லை. திரும்பத் திரும்ப படிக்கவேணும்.

Sunday, January 01, 2017

முற்றும்

வருடத்தின் கடைசிப் பத்து நாட்களில் பொன்னியின் செல்வனும் சிவகாமியின் செல்வனும் படித்து முடிக்க முடிந்தது. 2016இல் படித்த மற்றொரு புனைவு விஷ்ணுபுரம். தொடர்ந்து படிப்பது 5 வருஷமாக மிகக் குறைந்திருந்தது. 2016ல் மீண்டும் புத்தகங்களை எடுத்தது பற்றி மகிழ்ச்சி.

2017ல் மாதத்திற்கு ஒன்றாக மொத்தம் 12 புனைவுகள் படிக்கத் திட்டம். அதில் முதலாவதாக Kavitha Kane எழுதிய என்னிடம் உள்ள இரு புத்தகங்களில் ஒன்றை படிக்கவேண்டும். Menaka's Choice அல்லது Sita's Sister. பார்க்கலாம்.

Friday, December 30, 2016

இது ரொம்ப ஓவர்..

டீவி மெகா சீரியல்களில் வரும் கதாபத்திரங்களில் நல்லவர்கள் ரொம்ப நல்லவர்களாகவும், கெட்டவர்கள் ரொம்பக்கெட்டவர்களாகவும் இருக்கிறார்கள். நிஜத்தில் நல்லவன் எவன் கெட்டவன் எவன்னே தெரியறதில்ல..

சுந்தர சோழனுக்கு ஜெ!

என்னவோ தெரியல, சுந்தர சோழன் நோய்வாய்ப்பட்டு தஞ்சாவூர் அரண்மனைல இருந்த அந்தக் கதையப் படிக்கும்போது, ஜெயலலிதா அம்மா அப்போல்லோ ல இருந்த எண்ணம் வருது. அரசியல் இப்பவும் எப்பவும்ஒன்னுதாம்போல.. என்ன அம்மாவுக்கு அருள்மொழிவர்மன் மாதிரி ஒரு புள்ள இல்லாமப் போய்ட்டான்..

Saturday, December 24, 2016

என் சபதம்..

இந்த டிசம்பர் 31க்குள்ள அத முடிச்சுட்டு சொல்றேன் அது என்னன்னு..
Hint: கல்கி