கற்றது தமிழ் (சினிமா)
பாதிக்கும் அதிகமான தமிழர்கள் கேட்டிராத தமிழ்ப் பாடல்களையெல்லாம் தண்ணியடித்துவிட்டு தனியாக காரில் போவோரிடம் ஒப்பிக்கும் தமிழ் வாத்தியார், பிரபாகர். கால்சென்டரில் வேலை செய்பவரே அசந்துபோகும் அளவிற்கு ஆங்கிலம் பேசவும் தெரிந்திருக்கிறது அவருக்கு. ஆனால், தான் 2000 ரூபாய் சம்பளம் வாங்குவதற்கு காரணம் தான் தான் என்பது தெரிவதில்லை. படிப்பு அறிவை வளர்ப்பதர்க்காக மட்டுமே; வேலை வாங்கித்தர அல்ல என்பதை உணராத வாத்தியார். கைக்குட்டை விற்கும் அவரது கல்லூரி தோழர் பிழைக்கும் வழி தெரிந்திருக்கிறார்."பண்ணப் பழகடா பச்சைப் படுகொலை" என்று பாரதிதாசன் என்ன அர்த்தத்தில் சொன்னாரோ எனக்குத் தெரியாது. ஆனால், தான் 26 வயது வரை உடலுறவுகொள்ளாத காரணத்தால், கடற்கரையில் நெருக்காமாக அமர்ந்திருக்குமொரும் ஜோடியை சுட்டுக் கொல்ல பாரதிதாசன் சொல்லியிருக்க வாய்ப்பில்லை. "கற்றது தமிழ்", இயக்குனரின் இயலாமை அல்லது ஆற்றாமையின் வெளிப்பாடு, குமுறல்.
0 comments:
Post a Comment