Friday, March 03, 2017

போச்சா, போச்சாஅஅ..

அந்த சின்ன ஒர்ருவா காசு. சட்டுனு பாத்தா எட்டணா மாதிரி இருக்குமே, அது. பளிச்சுனு. கீழ கெடக்கு. பஸ் படில. இறங்கணும் அடுத்த ஸ்டாப்புல. என்ன யாரு கண்ணுக்கும் தெரியாமயா இருந்துருக்கும் இவ்ளோ நேரம்? யாரும் எடுக்கலையே? நம்ம எடுக்கலாமா வேணாமா? எல்லாரும் என்ன நினைப்பாங்க? எடுக்கல; இறங்கிட்டேன்.

இப்ப நினைச்சு என்ன பண்றது? நாலு பேரு சொல்லுக்கு பயந்தா ஒர்ருவா என்ன, எல்லாத்தையும் தான் எழக்க வேண்டியிருக்கும். மயிராச்சுன்னு இனி நம்ம போக்குல நம்ம போக வேண்டியது தான்.

No comments: