Monday, November 13, 2006

சூடு போட்டுக் கொண்ட பூனை நான்

ஓங்கி ஒலிக்கும்
கெட்டிமேளத்தில்
அமுங்கிப் போகிறது
யாரோ ஒருத்தரின்
விசும்பல் சத்தம்
எப்பொதும்.
-"வலி" என்ற தலைப்பில் வித்யாஷங்கர் அவர்கள் ஆனந்தவிகடன் முத்திரைக் கவிதையாக எழுதியது.

முன்னரே படித்திருக்கிறேன். இந்த கவிதையை என்னுடைய கற்பனை என தவறாக எண்ணி, "மேளச் சத்ததில்..." என்று பதிவு செய்ததற்கு மன்னிக்கவும். என் நண்பன் சிவசங்கர் அல்லது வேறொருவர் சுட்டிக்காட்டும் முன் என் தவறை நானே திருத்திக்கொண்ட வரையில் எனக்கு சந்தோஷமே...

1 comment:

Unknown said...

kavalai padadey. Varippulinnu urukkulla sollikkalam.